டவுன்ஹால் அருகே 350 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை: டவுன்ஹால் அடுத்த தாமஸ் வீதி பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 350 கிலோ எடையிலான பான்மசாலா, குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


கோவை: டவுன்ஹால் அடுத்த தாமஸ் வீதி பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 350 கிலோ எடையிலான பான்மசாலா, குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர்.

கோவை தாமஸ் வீதி பகுதியில் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான பூட்டியிருந்த அறை ஒன்றில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக வந்த தகவலை அடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று மாலை அங்கு சோதனையிட சென்றனர்.

ஆனால் அந்த கட்டிடத்தில் வாடகைக்கு இருந்த லோகநாதன் என்பவர் குட்கா பொருட்கள் இருந்த அறையை பூட்டு போட்டு சென்றார். இதனையடுத்து வீட்டை திறக்கும்படி சொல்லியும் திறக்கப்படாததால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வீட்டை பூட்டி சீல் வைத்துச் சென்றனர்.



இந்நிலையில், இன்று காலை காவல் நிலையத்திற்கு வந்த கட்டிட உரிமையாளர் சந்தோஷ், வாடகைக்கு இருக்கும் லோகநாதனை பூட்டைத் திறந்து விட சொல்லி இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து காவல் துறையினரும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் சீல் வைக்கப்பட்ட வீட்டை திறந்து உள்ளே சென்று சோதனையிட்டனர்.

அப்போது வீட்டில் சுமார் 350 கிலோ எடையிலான குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.



அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த மூன்று மாதமாக வீட்டை வாடகைக்கு எடுத்து லோகநாதன், குட்கா பொருட்களை பதுக்கி  வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் எனவும் இது தொடர்பாக லோகநாதன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தெரிவித்தார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...