ஆபத்து காலங்களைத் தவிர்த்து அபாய சங்கிலியை பிடித்து இழுக்க வேண்டாம்: பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்

ரயில்களில் இருக்கும் அபாய சங்கிலியை ஆபத்து காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெற்கு ரயில்வே பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரயில்களில் இருக்கும் அபாய சங்கிலியை ஆபத்து காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெற்கு ரயில்வே பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரயில் பயணத்தின் போது ஆபத்து காலங்களில் பயணிகளுக்கு உதவிடும் வகையில், அபாய சங்கிலி அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமான நேரங்களில் பயன்படுத்த வேண்டிய இந்த அபாய சங்கிலியை, பயணிகள் அற்ப காரணங்களுக்காக பயன்படுத்தி வருவதாக ரயில்வே நிர்வாகம் குற்றம்சாட்டி வருகிறது. ரயிலை தவறவிட்டவருக்காகவும், பயணத்தின் போது செல்போனை கீழே போடுதல், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் தின்பண்டங்கள் போன்றவை ரயில் இருந்து தவறி விழும் போது, அதனை எடுக்க போன்ற காரணங்களுக்காக அபாய சங்கிலியை பயணிகள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த மாதிரியான அற்ப காரணங்களுக்காக பயன்படுத்தினால், ரயில்வேத்துறை 141 பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்படுகிறது. அதாவது, ஒரு ஆண்டு சிறை அல்லது ரூ. 1,000 அபாரம் வசூலிக்கப்படுகிறது. இதுவரை, இந்த ஆண்டில் ஜுன் மாதம் வரையில் 737 பேரிடம் ரூ. 2.8 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரயில்களில் இருக்கும் அபாய சங்கிலியை ஆபத்து காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெற்கு ரயில்வே பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...