அழிந்து வரும் பட்டியலில் இருந்து புலி இனங்கள் மீட்கப்படுமா...?, தமிழகத்தில் புலிகள் காப்பகங்களை விரிவுபடுத்தக் கோரிக்கை

தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களைப் போல, இன்னும் சில புலிகள் காப்பகத்தை விரிவுபடுத்தினால் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வன உயிரின ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.


தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களைப் போல, இன்னும் சில புலிகள் காப்பகத்தை விரிவுபடுத்தினால் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வன உயிரின ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். 



இந்தியாவில் 1970-ம் ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 40,000 புலிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின், 1972-ம் ஆண்டு நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்தது. 



பின்னர், இது தொடர்பாக, அப்போதை பாரத பிரதமர் இந்திரா காந்தியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்ததில், மனிதன் காடுகளை அழித்தும், வனவிலங்குகளை வேட்டையாடியதில் தான் பல்வேறு வனவிலங்குகளும், புலிகளும் அழிந்து உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, அழிந்து வரும் விலங்கினங்களின் பட்டியலில் புலிகளும் சேர்க்கப்பட்டது.



இதற்குப் பிறகு தான் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, புலிகள் காப்பக திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கடந்த 1973-ம் ஆண்டு 'பனாமா' என்ற இடத்தில் தான் முதன்முதலாகப் புலிகள் காப்பகம் தொடக்கப்பட்டது. அதன் பின்னரும், புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தேச புலிகளின் எண்ணிக்கை, வெறும் 2,300-க்கும் மேற்பட்ட புலிகள்தான் இருக்கக்கூடும் என கணக்கீடு கூறுகிறது. இவ்வாறு புலிகள் அழிந்து வருவதைக் கண்டு அதிர்ந்து போன அரசாங்கம், புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போன்றவர்களை இணைத்து ஓரு அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பின் மூலம், புலிகளைப் பாதுகாக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு புலிகள் காப்பகத்தை அதிகப்படுத்தப்பட்டது. 



சுமார் 1980-களில் 9,115 சதுர கி.மீ., பரப்பளவைக் கொண்டிருந்த புலிகள் காப்பகங்கள், 13,000 சதுர கி.மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது, இந்தியாவில் 48 புலிகள் காப்பகம் உள்ளது. இந்தப் புலிகள் காப்பகங்களில் புலிகளை மட்டும் பாதுகாக்காமல், அதற்கு உணவான மான், காட்டெருமை, கடாமான் மற்றும் தாவர வகைகளும் பாதுகாக்கப்பட்டு வருவதால், தற்போது புலிகளின் எண்ணிக்கையும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. 



இந்தியாவில் அடர்த்தி கொண்ட புலிகள் காப்பகமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் திகழ்ந்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் தற்போது களக்காடு முண்டந்துறை, முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை, சத்தியமங்கலம் உள்ளிட்ட 4 புலிகள் காப்பகம் உள்ளது. 



இந்த நிலையில், தமிழகத்தில் புலிகள் காப்பகத்தை மேலும் விரிவுபடுத்தினால் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே, உலக புலிகள் தினமான ஜுலை 29-ம் தேதியன்று புலிகளை பாதுகாக்கக் காடுகளை அழிக்காமலும், அதன் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்யாமல் அழிந்து வரும் புலிகளை பாதுகாப்போம் என உறுதி மொழி ஏற்போம்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...