திருப்பூரில் லோக் அதாலத் மூலம் 1,393 வழக்குகளில் தீர்வு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தின் மூலம் 1,393 வழக்குகளில் ரூ. 54,65 கோடி அளவில் இழப்பீடு பெற்றுத் தரப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தின் மூலம் 1,393 வழக்குகளில் ரூ. 54,65 கோடி அளவில் இழப்பீடு பெற்றுத் தரப்பட்டது. 



திருப்பூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி அல்லி தலைமையில் லோக் அதாலத் நடந்தது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் வழக்குகளை விசாரித்து தீர்வு ஏற்படுத்தினர். மேலும், அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம், உடுமலை நீதிமன்றங்களிலும் இந்த நிகழ்வு நடந்தது. மாவட்ட அளவில் மொத்தம் 3,154 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. அதில், 1,393 வழக்குகளுக்கு ரூ. 54,65,98,719 கோடி மதிப்பில் சமரச தீர்வு ஏற்படுத்தப்பட்டது. 



குறிப்பாக, திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியைச் சேர்ந்த 108 வயதான கருணையம்மாள் என்ற மூதாட்டிக்கு, 2017-ம் ஆண்டு அவரது மகன் விபத்தில் இறந்ததில் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ. 10 லட்சம் இழப்பீடு பெற்று தரப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...