ரஜினிமக்கள் மன்றத்தில் இணைவது குறித்து சிந்திக்கவில்லை : கோவையில் தமிழருவி மணியன் பேட்டி

கோவை: காந்திய மக்கள் இயக்கத்தைக் கலைத்துவிட்டு, ரஜினி மக்கள் மன்றத்தில் இணைவது குறித்து சிந்திக்கவில்லை என அவ்வியக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.



கோவை: காந்திய மக்கள் இயக்கத்தைக் கலைத்துவிட்டு, ரஜினி மக்கள் மன்றத்தில் இணைவது குறித்து சிந்திக்கவில்லை என அவ்வியக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

கோவையில் காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அவ்வியக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது :- தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது கனவாகவே உள்ளது. டாஸ்மாக் வருவாயைக் கூட்டுவதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. பீகாரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியதைப் போல, தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். படிப்படியாக ஒராண்டிற்குள் தமிழகம் மதுவற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராடும் அமைப்புகள், ஏன் மதுக்கடைகளுக்கு எதிராக போராடவில்லை..?. 



ஊழலைப் பாதுகாக்கும் வகையில் தான் லோக் ஆயுக்தாவை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த லோக் ஆயுக்தாவை கிழித்து குப்பையில் எறிய வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு 60 நாட்களுக்கு மேல் நீடிக்க வாய்ப்பே இல்லை. சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்குவதோடு, மக்கள் ஆதரவோடு இந்தத் திட்டம் செயல்படுத்த வேண்டும். 

உரிய நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவார். கமல்ஹாசன் அவசர அவசரமாகக் கட்சி தொடங்கி, அடிப்படை அமைப்பைக் கட்டமைக்க முடியாமல் உள்ளார். 80 விழுக்காடு கட்சி அடிப்படை கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 20 விழுக்காடு பணிகள் முடிவடைந்ததும், ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார். 3 மாத இடைவெளி கூட தேர்தலை சந்திக்க ரஜினிக்கு போதுமானது. இதுவரை பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ரஜினிகாந்த் ஒருவார்த்தை கூட சொல்லவில்லை. மேலும், முள்ளை முள்ளால் எடுப்பது போல, கலைத்துறையில் இருந்து வந்தவர்களால் மலிந்த ஊழலை ரஜினி அகற்றுவார். நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார். நடிகர் கமலஹாசன் சூப்பர் ஆக்டர்.  மக்கள் ஆதரவு இருப்பதால் தான் 40 ஆண்டுகளாக ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். 

எப்போது கட்சி தொடங்குவது குறித்து ரஜினிகாந்த் தான் முடிவு செய்வார். ரஜினி முதலமைச்சராக நாங்கள் ஆதரவு தருகிறோம். ரஜினிகாந்திற்கு துணையாக இருப்போம். ரஜினி மக்கள் மன்றத்தில் இணைப்பது குறித்து சிந்திக்கவில்லை. பா.ஜ.க., அனாதையாக இருக்கிறது என்பதை நான் சொல்லி தான், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதை முதலில் சொன்னது ரஜினி தான், இவ்வாறு அவர் கூறினார். 



முன்னதாக, பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், லோக் ஆயுக்தாவை கூர்மைப்படுத்தக் கோரியும் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் கோவை காந்திப்பார்க்கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...