உதகை - கூடலூர் சாலையில் ராட்சத மரம் விழுந்து விபத்து : 18 வயது இளைஞர் பலி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத மரம் விழுந்து விபத்தில், 18 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத மரம் விழுந்து விபத்தில், 18 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். 

நீலகிரியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது. நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில இடங்களில் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து வருகின்றன. 



இந்நிலையில், நீலகிரியில் நேற்று மாலை முதல் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால், இன்று உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பிங்கர் போஸ்ட் என்னும் இடத்தில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. ஞாயிற்றுக் கிழமை என்பதாலும் காலை நேரம் என்பதாலும் கிறிஸ்துவ ஆலய வழிபாட்டுக்கு சென்ற மக்கள், திரும்பி வந்து கொண்டிருந்தனர். இதில், இம்மானுவேல் அகஸ்டின் (18) மரம் விழுந்த விபத்தில் சிக்கிக் கொண்டார். தலையில் பலத்த காயமடைந்த இவரை, பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உதகையில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே இம்மானுவேல் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து சாலையில் விழுந்து கிடந்த மரத்தை பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு அகற்றினர். இதனால், கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், அப்பகுதியில் ஆபத்தான நிலையில் மரங்கள் இருப்பதால், அதனை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், பிங்கர் போஸ்ட் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் அனுப்பி வைக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் கூடலூர், உதகை ஆகிய பகுதிகளை தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேரிடர் கட்டுப்பாட்டு அறை தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...