டி.டி.வி., தினகரன் தன்னை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார் : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி காட்டம்

கோவை: கோவையில் நடைபெற்ற அ.ம.மு.க., பொதுக்கூட்டத்தில் டி.டி.வி தினகரன் தன்னை பற்றி தரம் தாழ்ந்து விமர்சித்திருப்பதாகவும், அவர் விமர்சித்தது உண்மை எனில் எந்தக் கோவிலிலும் வந்து சொல்லட்டும் என அமைச்சர் வேலுமணி காட்டமாக பதிலளித்துள்ளார்.

கோவை: கோவையில் நடைபெற்ற அ.ம.மு.க., பொதுக்கூட்டத்தில் டி.டி.வி தினகரன் தன்னை பற்றி தரம் தாழ்ந்து விமர்சித்திருப்பதாகவும், அவர் விமர்சித்தது உண்மை எனில் எந்தக் கோவிலிலும் வந்து சொல்லட்டும் என அமைச்சர் வேலுமணி காட்டமாக பதிலளித்துள்ளார்.

ஆர்.எஸ்.புரம், பாலசுந்தரம் சாலை என ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 113 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் திவான் பகதூர் சாலையை மாதிரி சாலையாக உருவாக்கும் பணியை ஆரம்பித்து வைத்தார். 



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும். எதிர்க்கட்சிகள் எத்தனை இடையூறுகள் செய்தாலும் 24 மணிநேர குடிநீர் திட்டம் கோவைக்கு கொண்டு வரப்படும். நதியை சீரமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியைக் கொண்டு நொய்யலில் கழிவு கலப்பதை முற்றிலும் நிறுத்தப்படும், என்றார். 



மேலும், கோவையில் நடைபெற்ற அ..ம.மு.க., பொதுக்கூட்டத்தில் டி.டி.வி., தினகரன் விமர்சித்தது குறித்த கேள்விக்கு அமைச்சர் வேலுமணி பதிலளிக்கையில், "ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் நான் பணியாற்றியதை தரம் தாழ்ந்து தினகரன் விமர்சித்திருக்கிறார். அத்தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலின் போது தான் அம்மாவட்ட செயலாளராக இருந்த சண்முகவேலு தலைமையில் வடுகப்பட்டியில் தான் பணியாற்றினேன். உண்மையில்லாத பலவற்றை கூறும் தினகரன், அதுபோன்ற கருத்துக்களை எந்த கோவிலிலும் சொல்லட்டும். 

இதேபோல, தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ள தினகரன், தி.மு.க.,வை விமர்சிப்பதில்லை. தினகரனுக்காக சட்டமன்றத்தில் தி.மு.க.,. எம்.எல்.ஏ., அன்பழகன் எழுந்து குரல் எழுப்புகிறார். ஒன்றரை கோடி அ.தி.மு.க.,வினரும் அம்மாவின் வாரிசுகளாவர். தன்னைத் தானே அம்மாவின் வாரிசு என கூறிக் கொண்டு தினகரன் கட்சி ஆரம்பித்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். ஆர்.கே., நகர் இடைத்தேர்தலில் பணத்தை காட்டி வென்றது போல், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைக் காட்டி வெளிமாநில தொழிலாளர்களை வைத்து பொதுக்கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்," இவ்வாறு கூறினார். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...