குன்னூர் மரப்பாலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் காயம்

நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் படுகாயமடைந்தனர்.

நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் படுகாயமடைந்தனர். 



காங்கேயத்தில் இருந்து நீலகிரியில் சுற்றுலாவை நிறைவு செய்து விட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் டெம்போ டிராவலரில் மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம் அருகே வந்த இந்த வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த 21 பேர் பலத்த காயமடைந்தனர். 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெலிங்டன் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு குன்னூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், விபத்துக்குள்ளான வேனை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை போலீசார் சீர் செய்தனர். 



இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், மலைப் பகுதிகளில் வாகனம் ஓட்டும் போது கவனத்துடன், பாதுகாப்புடன் வாகனங்களை இயக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். 

Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...