பா.ஜ.க.,வுடன் இணைந்தால் ரஜினிக்கு சிவசேனா ஆதரவளிக்கும் : மாநிலத் தலைவர் அறிவிப்பு

நீலகிரி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க,வுடன் இணைந்து போட்டியிட்டால், நடிகர் ரஜினிகாந்த்திற்கு சிவசேனா ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் ரமேஷ் பாபு தெரிவித்தார்.

நீலகிரி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க,வுடன் இணைந்து போட்டியிட்டால், நடிகர் ரஜினிகாந்த்திற்கு சிவசேனா ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் ரமேஷ் பாபு தெரிவித்தார். 

நீலகிரி மாவட்டம் உதகையில் சிவசேனா கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் ஏ.டி.சி., சுதந்திர திடலில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் ரமேஷ் பாபு கொடி ஏற்றி துவக்கி வைத்தார்.



பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- பொதுமக்களுக்குக் கந்து வட்டியை கொடுத்து தற்கொலைக்கு தூண்டுபவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் எட்டு வழிச்சாலை பொதுமக்களுக்குப் பயன் தரும் சாலையாக இருப்பதால், அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு, தமிழக அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.



வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த், ஆன்மீக அரசியலை செயல்படுத்தப்போவதாக தெரிவித்திருப்பதை சிவசேனா கட்சி ஆதரிக்கிறது. ரஜினிகாந்த் பா.ஜ.க.,வுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் சிவசேனா கட்சியும் அதில் இணையும், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...