கொட்டும் மழையிலும் தி.மு.க., தெற்கு மாவட்ட வால்பாறை செயல்வீரர்கள் கூட்டம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொட்டும் மழையிலும் தி.மு.க., தெற்கு மாவட்ட வால்பாறை நகர கழக செயல்வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொட்டும் மழையிலும் தி.மு.க., தெற்கு மாவட்ட வால்பாறை நகர கழக செயல்வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.



வால்பாறை நகர கழகம் ஏற்பாடு செய்யப்பட்ட அலுவலகத்திலும், பழைய பேருந்து நிலையத்திலும் கொடியேற்றப்பட்டது. இதற்கு மத்தியில், அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வால்பாறை நகர கழக செயற்குழு மற்றும் பொது உறுப்பினர்களின் கூட்டம் சரவண மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அவைத்தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். நகர கழக பொறுப்பாளர் பால்பாண்டி வரவேற்புரையாற்றினர். 

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மற்றும் கோவை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ்  ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்தக் கூட்டத்தில் கழக மாவட்ட நிர்வாகிகளும், வால்பாறை முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜானகிராமர், சத்தியவாணிமுத்து, நகர்மன்ற உறுப்பினர்கள், மொய்தீன், சுதாகர், செல்வம், இந்துமதி, சூர்யபிரபா மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...