உள்ளேயும் வரமுடியல வெளியேவும் போகமுடியல...! - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வர ஒரே வழி பின்பற்றப்படுவதால் மக்கள் உள்ளே வரவும் வெளியே செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வர ஒரே வழி பின்பற்றப்படுவதால் மக்கள் உள்ளே வரவும் வெளியே செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மனு நீதி நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்களை காவல்துறையினர் சோதனை செய்து அனுப்புவது வழக்கம். இதற்காக நுழைவு வாயில் முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே சோதனையின் போது நுழைவு வாயில் முன்பு உள்ள கதவு ஒரு பக்கம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இதனால் நான்கு சக்கரம் வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு யாரும் உள்ளே, வெளியே போக முடியாத சூழல் ஏற்படுகின்றது.



காவல் துறையினர் இதனை சீர் செய்ய இரு கதவுகளையும் திறக்க வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு காண நான்கு சக்கர சென்று வர முன் பக்கமும் இருசக்கர வாகனங்கள் நுழைய பின் பக்கம் பயன்படுத்த வேண்டும் என மக்கள் தெரிவித்தனர். அதே போல் மக்களை சோதனை செய்யும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளையும் ஓரமாக வைத்து வாகனங்கள் சென்று வரும் வகையில் அமைத்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.



Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...