செய்தியாளர் ஷாலினி உயிரிழப்பு: குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: சாலை விபத்தில் பலியான செய்தியாளர் ஷாலினியின் குடும்பத்திற்கு குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சாலை விபத்தில் பலியான செய்தியாளர் ஷாலினியின் குடும்பத்திற்கு குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்தவர் ஷாலினி. இவர் சென்னையிலுள்ள தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். இவரும், இவரது நண்பர்கள் நான்கு பேரும் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டியில் வசிக்கும் சக ஊழியரை பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்களது கார் கொடைரோடு என்ற இடத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானார்.

இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் ஷாலினியின் பிறந்த நாளன்றே அவர் உயிரிழந்தது அனைவர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரங்கல்

செய்தியாளர் ஷாலினி உயிரிழப்பிற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில பா.ஜ.க., தலைவர் தமிழை சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஷாலினியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...