☔ கோவை, நீலகிரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் நாளை மிக அதிகமாக கனமழை பெய்யும் - இந்திய வானிலை மையம்

கோவை: கோவை, நீலகிரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


கோவை: கோவை, நீலகிரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



கோவையை பொறுத்தவரையில் இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விட கூடுதலாக பெய்தது. இதனால், கோவையின் குடிநீர் ஆதாரங்களான சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகள் நிரம்பின. மேலும், மாவட்டத்தின் பல்வேறு அணைகளும் அதன் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன.

தற்போது இரண்டாம் கட்ட தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், இன்று காலை கோவையில் கனமழை பெய்தது. இதனால், பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அவதியடைந்தனர்.



இந்த நிலையில், கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த பருவ மழையின் போது கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படவில்லை. தற்போது வெளியாகியுள்ள இந்த அறிவிப்பின்படி, மாவட்ட நிர்வாகம் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...