போளூவாம்பட்டி பகுதியில் வீடுகளை சூறையாடிய யானை கூட்டம் மக்கள் அலறியடித்து ஓட்டம்

கோவையை அடுத்த போளூவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. தனியாகவும், கூட்டமாகவும் அப்பகுதியில் உள்ள வீடு மற்றும் வாழை, சோளம், தக்காளி தோட்டங்களுக்குள் புகுந்து விடுகின்றன. 

நேற்று முன்தினம் மாலை, வனத்தில் இருந்து வெளியேறிய ஒன்பது யானைகள் கொண்ட கூட்டம், முள்ளங்காடு வழியாக சிறுவாணி சாலையை கடந்து, முட்டத்து வயல் பகுதிக்குள் நுழைந்தது. அங்கிருந்த தண்ணீர் தொட்டியை உடைத்து தள்ளியது. பின்னர், குளத்தேரி பகுதியை நோக்கி சென்ற யானை கூட்டம், அங்கிருந்த இரண்டு வீடுகளை இடித்து தள்ளியது. 

அப்போது, வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் அலறியடித்து ஒட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள், காயமின்றி தப்பினர். அக்கம் பக்கத்தினர் சத்தம் எழுப்பி, யானை கூட்டத்தை விரட்டியடிக்க முயற்சி செய்தனர். வனத்துறையினரும் அங்கு விரைந்தனர். சுமார் நான்கு மணி நேரம் போராடி, யானை கூட்டத்தை தாணிகண்டி என்ற வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...