அதிமுக வேட்பாளர்களை மாற்ற கோரி அதிமுக தொண்டர்கள் மூன்றாவது நாளாக போராட்டம்.

கோவை மாநகராட்சி 84வது வார்டு வேட்பாளராக அதிமுகவை சேர்ந்த கணபதி சுப்பிரமணியம் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய கவுன்சிலரான அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுக மாநகராட்சி 84 வது வேட்பாளரை மாற்ற கோரி ஏராளமான அதிமுகவினர் இன்று கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கணபதி சுப்பிரமணியம் ஏற்கனவே கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருபவர் எனவும், தமிழக முதல்வர் பேனரை கிழித்தவர் எனவும் குற்றம்சாட்டிய அவர்கள், கணபதி சுப்பிரமணியம் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டினர்.

எனவே 84வது வார்டு வேட்பாளரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும வலியுறுத்திய அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர். ஏற்கனவே இராமநாதபுரம் பகுதியில் 68வது வார்டு, 70வது வார்டு, 71 வார்டு ,73வது வார்டு, 75 வதுவார்டு ஆகியவார்டுகளில் அறிவித்துள்ள வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த இரு தினங்களாகஅதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 84வது வார்டு அதிமுக வேட்பாளரையும் மாற்றவேண்டும் என கோரி அதிமுகவினர் அதிமுக அலுவலகத்தை மூன்றாவது நாளாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...