இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 477 ஆமைகள் மீட்பு

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 477 ஆமைகளை மீட்டுள்ளதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் சிலவற்றை இலங்கைக்கும் வேறு நாடுகளுக்கும் கடத்தவிருந்ததாக கிடத்த தகவலையடுத்து, மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தூத்துக்குடியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, கீழ வைப்பார் கிராமத்தை நோக்கிச் சென்ற ஒரு வாகனத்தை வழிமறைத்துச் சோதனையிட்டனர்.

அந்த வாகனத்தில் இருந்த 23 பெட்டிகளில் இருந்து 477 உயிருள்ள ஆமைகள் மீட்கப்பட்டதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. அந்த வாகனத்தில் இருந்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.



கைப்பற்றப்பட்ட 477 ஆமைகளில் 473 ஆமைகள், மிகவும் அழியும் அபாயத்தில் உள்ள spotted black terrapin உள்ளிட்ட வகைகளைச் சேர்ந்தவை எனத் தெரியவந்துள்ளது.

இவற்றில் சில வெளிநாடுகளில் வளர்ப்புப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. சில ஆமைகள் உணவாகவும் பயன்படுகின்றன.

இதற்குப் பிறகு இந்தக் கடத்தலுக்குப் பின்னணியில் இருந்த நபர் மதுரைக்கு அருகில் கைதுசெய்யப்பட்டார்.

இந்த ஆமைகள் வடஇந்தியாவிலிருந்து சாலை வழியாகக் கடத்திக்கொண்டுவரப்பட்டு, சென்னையில் வளர்க்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என வருவாய்ப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியிலிருந்து இந்த ஆமைகள் நாட்டுப் படகின் மூலம் இலங்கைக்கு அனுப்பி, பிறகு அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்ததாக கைதுசெய்யப்பட்டிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஆமைகள் அனைத்தும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...