யூரி தாக்குதல் எதிரொளி - பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி

டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தின் விமானப்படை நேற்று இரவு அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் பல அழிக்கப்பட்டன. இரு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். யூரி தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடி இதுவாகும்.

இந்த தாக்குதலை பாகிஸ்தான் யூகிக்க முடியவில்லை. முப்படைகளின் கண்களிலும் மண்ணை தூவிவிட்டு இந்திய ராணுவம் இந்த தாக்குதலை வெற்றிகரமாக முடித்தது. சிறப்பு படையினரும் இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அனைத்து மாநில முதல்வர்களையும் போனில் அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு முன்பாகவே, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான உயர் அதிகாரிக்கு, இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான உயர் அதிகாரி ரன்பீர் சிங் போன் மூலம், இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள தீவிரவாத முகாம்களை நாங்கள் அழித்துள்ளோம். அதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். நீங்களும் தீவிரவாதிகளை ஒழிக்க எங்களுக்கு ஆதரவு வழங்குங்கள்" என்று ரன்பீர் சிங், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிக்கு போனில் தெரிவித்துள்ளார்.

அதாவது, நாங்கள் போட்டுத்தள்ளிவிட்டோம், நீங்கள் பிணங்களை எடுத்துச் செல்லுங்கள் என்பதை நாகரீகமாக கூறியுள்ளார் ரன்பீர் சிங். இதன்மூலம், இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்திவிட்டதாக உலக நாடுகள் பழி சொல்வதிலிருந்தும் தப்பிக்க இந்த நடவடிக்கையை இந்த ராணுவம் எடுத்துள்ளது. அதாவது, பாகிஸ்தானின் உதவியை கோரியபடியேதான், நாங்கள் தீவிரவாதிகளை அழித்தோம் என இந்தியா வாதிட இந்த போன் அழைப்பு ஒரு ஆதாரமாக இருக்கும் என்கிறார்கள் பாதுகாப்பு ஆலோசகர்கள்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...