புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்


கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு, புரட்சிகர மாணவர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் "தேசிய கல்விக்கொள்கை 2016 வரைவிற்கான உள்ளீடுகள்" என்ற தலைப்பில் கடந்த  ஜூன் மாதம் தனது இணையதளத்தில் ஆவணம் ஒன்றை வெளியிட்டது.



இந்த புதிய கல்விமுறை தாய்வழிக்கல்வியை பாதிக்கும் என்றும், சமஸ்கிருதத்தை மத்திய அரசு திணிப்பதாகவும் கூறி புரட்சிகர மாணவர் முன்னணியினர், கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1 பெண் உட்பட மொத்தம் 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதை தொடர்ந்து, அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெகன் பேசியதாவது:- 

சமஸ்கிருத மொழியை வெறும் 11 ஆயிரம் பேர் மட்டுமே பேசுகின்றனர். ஆனால் மத்திய அரசு அதை படிக்க வலியுறுத்தி வருகிறது. இதனால் தாய் மொழி தமிழ் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கையால் உயர்கல்வித்துறை கார்ப்பரேட் மயமாக்கப்படும் அபாயமும் உள்ளது. "எங்களுக்கு தாய் மொழிக் கல்வியே போதும்" இக்கல்வி முறை எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு தாய் மொழிக்கல்வியே போதும் என இவ்வாறு அவர் கூறினார்.



Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...