காவிரியில் நீர் திறந்துவிடக் கோரி தமிழ் தேச புரட்சி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தமிழ் தேச புரட்சி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




காவிரியில் இருந்து தமிழக அரசுக்கு நீர் திறந்துவிடக் கோரி கர்நாடக அரசுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், கர்நாடக அரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் தமிழகத்திற்கு நீர் திறந்து விடவில்லை. இதை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தமிழ் தேச புரட்சி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். 




அந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினர் நாகேந்திர குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் :- 
காவிரியில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன்  500 டி.எம்.சி வரை நீர் பெற்ற தமிழகம், தற்போது 60 டி.எம்.சி வரை கூட பெற முடியவில்லை. காவிரியை நம்பி தமிழகத்தில் 20 மாவட்டங்கள் உள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கர்நாடக அரசு செயல்படுகிறது. உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...