முதலமைச்சர் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்- அப்பல்லோ நிர்வாகம்

முதல்வர் உடல்நிலை குறித்து இன்று காலை 8 மணி அளவில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை மூத்த செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு உடல் நலம் பெற மே‌லும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்படி முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் முதலமைச்சர் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் என காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் உடல் நிலை குறித்து வதந்திகளைப் பரப்புவோர் கண்காணிக்கப்படுவதாகவும், அவர்கள் மீது கடும் ‌‌‌நட‌வடிக்கை எடுக்கப்படும் என்றும்‌ காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...