சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் நிலையை காவல்துறை உடனடியாக தெரிவ�

கோவையில் இந்து முன்னனி பிரமுகர் சசிகுமார் கடந்த மாதம் 22.9.2016 அன்று மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் கோவையில் காவல்துறையினர் பலரை சந்தேகத்தின் பேரில் கைது  செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் நிலையை காவல்துறை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

 கோவையில் கடந்த 22ம் தேதி இந்து முன்னனி பிரமுகர் ச்சிகுமார் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது இறுதி ஊர்வலத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.அதில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.இந்த சூழலில் கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துடியலூர் பகுதியில் சந்தித்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,வன்முறை சம்பவம் தொடர்பாக தற்போது காவல்துறையினர் அப்பாவிகளை கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டதில் சில விஷயங்கள் உள்ளே இருப்பதாகவும் குற்றம் சாட்டியதுடன் அவர்களை எங்கு வைத்துள்ளனர் என்பது குறித்த பட்டியல் மற்றும் விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். கொலையாளிகளை கைது செய்ய வேண்டியது காவல்துறையினரின் கட்டாய கடமை எனவும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதில் யாருடைய தலையிடும் இருக்க கூடாது எனவும் கூறினார். இதேபோல் சிபிசிஐடி காவல்துறையினர் இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டுமெனவும் ஏற்கனவே இதுபோன்ற வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வழக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்தால் நன்றாக இருக்கும் எனவும் பொன் ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக வன்முறை சம்பவம் தொடரபாக கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கைது செய்யப்பட்டவர்களை மீட்டு தர கோரி கண்ணீருடன் அமைச்சரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...