மார்பக புற்று நோய் பற்றிய புதிய கருவி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை


ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சையில் சாதனை படைத்து வருகிறது. உலக மார்பக புற்று நோய் விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் மார்பக புற்று நோய் பற்றிய புதிய கருவி வெளியிடப்பட்டது.

புற்றுநோய்மையத்தின்இயக்குனரும், தலைமைமருத்துவருமானமருத்துவர்குகன்இந்தகருவியைபற்றிக்கூறுகையில்:

ஆண்டு தோறும் பிங்க் மாதம் என்று அழைக்கப்படும் அக்டோபர் மாதத்தில் உலக மார்பக புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்று நோய் சிகிச்சை மையத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. இதுவரை மக்களிடையே 12000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை கடந்த 13 ஆண்டுகளாக, மார்பகம் பற்றிய விழிப்புணர்வு கையேடு, இலவச மேமோகிராம், குறும்படம் வெளியிடுதல்,  போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.



தற்போது, இந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கும் இன்று ஒரு புதிய சாதனையாக மார்பக புற்று நோய் பற்றிய பொதுமக்கள் அனைவரும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் ஒரு கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கருவி, ஒரு பிங்க் நிறமான 8 ஜி.பி திறன் கொண்ட சிலிக்கான் யு.எஸ்.பி கைப்பட்டை ஆகும்.இது வளையல் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது மார்பக புற்று நோய்  பற்றிய அதிவேகமான தெளிய இணையதள இணைப்பு, கைபேசி, அலைபேசியில், எளிதாக கொண்டு சேர்க்கக்கூடிய மொபைல் அப்பிளிக்கேஷன் இணைப்பு, பார்க்க புற்று நோய் பற்றிய வீடியோ, ஆரம்ப நிலையில் மார்பக கட்டிகளை பரிசோதனை செய்தல் மற்றும் ஆரம்ப நிலையில் மார்பக புற்று நோய்களை கண்டறிதல் முக்கியத்துவம் வலியுறுத்தும் குறும்படம், இணையவழி புத்தகம் என்னும் மார்பக புற்று நோய்  பற்றிய தாவல் திரட்டு. 

இந்த கைப்பட்டையை இலவசமாக மகளிர் சுயஉதவிக்குழு, மகளிர் மன்றங்கள், ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், கிராமப்புற மகளிர் மன்றங்கள், மகளிர் கல்லூரி ஆகிய அமைப்புகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதோடு, வழக்கம்போல் இம்மாதம் இலவச மார்பக புற்று நோய் பரிசோதனை மற்றும் மேமோகிராம் போன்ற பரிசோதனை நடக்கும். புற்று நோயை முறியடிப்போம் என்றார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...