முதல்வர் உடல்நலம் குறித்து அவதூறு: பிரான்ஸ் வாழ் தமிழ்ப் பெண் தமிழச்சி மீது வழக்கு

முதல்வர் உடல்நலம் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு தகவல்களை பரப்பி வருவதாக, பிரான்ஸ் வாழ் தமிழ்ப் பெண் தமிழச்சி மீது மதுரை மாநகர சைபர் குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். மதுரை மாநகர் மாவட்ட அதிமுக இலக்கிய அணிச் செயலர். இவர் மதுரை மாநகர சைபர் குற்றப்பிரிவு போலீஸாரிடம் அளித்த புகார் மனு விவரம்: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து, பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் தமிழ்ப் பெண்ணான தமிழச்சி என்பவர் சமூக ஊடகங்களில் தொடர்ந்து அவதூறான தகவல்களையும், பொய்யான செய்திகளையும் வெளியிட்டு வருகிறார்.

இதுதமிழக முதல்வரின் நற்பெயருக்கு களங்கத்தையும், அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே அவதூறான தகவல்களை வெளியிட்டு வரும் தமிழச்சி மீது இணையதள குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

புகாரைப் பெற்றுக் கொண்ட மாநகர சைபர் குற்றப்பிரிவு போலீஸார் பிரான்ஸ் வாழ் தமிழரான தமிழச்சி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...