உணவில் விஷம் கலந்து ஐ.எஸ்.தலைவரை கொல்ல சதி?

பாக்தாத்: ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதியை உணவில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயற்சி நடந்ததாகவும், உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் சிசிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உணவில் விஷம்

ஈராக், சிரியா எல்லை பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு அல்கொய்தா அமைப்பில் இருந்து பிரிந்த வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஈராக்கில் இருந்து வெளிவரும் பல்வேறு அரேபிய செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஐ.எஸ்., அமைப்பின் தலைவர் அபு-பக்கர் அல் பாக்தாதி, இவரது மூன்று உதவியாளர்கள் ஈராக்கின் நைன்வேக் பீ ஆஜ் மாவட்டத்தில் தங்கியிருந்த போது மதிய உணவு சாப்பிட்டனர். அப்போது அவர்களுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போது தான் தெரிந்தது சாப்பிட்ட உணவில் யாரோ விஷம் கலந்து கொடுத்திருப்பது.

தீவிர சிகிச்சை:

உடனடியாக ரகசிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.உணவில் விஷம் கலந்தது கொல்ல முயற்சித்தது யார் என்பது குறித்து பலரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

10 மில்லியன் டாலர் பரிசு:

ஏற்கனவே அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் நடத்திய தாக்குதலில் பல முறை காயங்களுடன் தப்பினான் பாக்தாதி, இவனை உயிருடனோ, பிணமாகவோ பிடித்தாலோ, இருப்பிடம் குறித்த தகவல்தெரிவித்தாலோ, 10 மில்லியன் டாலர் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...