தமிழக மீனவர்கள் 5 பேர் கைது

புதுக்கோட்டை: ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் ஜெகாதாப்பட்டினத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான படகில், தங்கமணி, பிரதீப், அருண், சண்முகவேல், கோபு என்ற 5 மீனவர்கள் நேற்று கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இன்று அவர்கள் கரை திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இன்று டில்லி வர உள்ளதால், கைதான மீனவர்கள் 5 பேரும் விசாரணைக்கு பின்னர் விடுதலை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...