வி.ஐ.பி., பாதுகாப்பை ஏற்க மறுத்த சிங்கப்பூர் பிரதமர்

புதுடில்லி: இந்தியா வந்த சிங்கப்பூர் பிரதமர் லி ஹிசியான் லூங், வி.ஐ.பி., பாதுகாப்பை ஏற்க மறுத்து பஸ் மூலம் ஓட்டலுக்கு சென்றார்.சிங்கப்பூர் பிரதமர் லி ஹிசியான் லூங் 5 நாள் அரசு முறை பயணமாக நேற்று மாலை டில்லி வந்துள்ளார். இன்று அவருக்கு அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர் அவர், பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளார் பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். சிங்கப்பூர் பிரதமருடன், அவரது மனைவி, முக்கிய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் டில்லி வந்துள்ளனர். நாளை மற்றும் நாளை மறுநாள் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் செல்லும் சிங்கப்பூர் பிரதமரை அம்மாநில முதல்வர் வசுந்தர ராஜே சந்தித்து மதிய விருந்து அளிக்க உள்ளார்.

உதய்ப்பூரில் சுற்றுலா தொடர்பான நிகழ்ச்சி துவக்க விழாவில் கலந்து கொள்ள உள்ளார் சிங்கப்பூர் பிரதமர்.இந்நிலையில், நேற்று டில்லி வந்த அவரை மத்திய இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் மற்றும் அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர், சிங்கப்பூர் பிரதமர் வி.ஐ.பி., பாதுகாப்பை ஏற்க மறுத்த அவர் பஸ் மூலம், தான் தங்கவுள்ள ஓட்டலுக்கு சென்றடைந்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...