24 வயது பெண்ணின் உடல் உறுப்பு தானம் 5 பேருக்கு மறுவாழ்வு

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த 24 வயது பெண்ணின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. கோயம்புத்தூர் நகரில் அம்மங்குளம் பகுதி சேர்ந்தவர் திருமதி பவித்ரா நந்தகுமார், 24 வயதான அவர். தனது கணவன் மற்றும் மூன்று மாத குழந்தையுடன் அக்டோபர் 2, 2016 அன்று காலை காந்திபுரம் அருகே பயணித்த போது சாலை விபத்தில் சிக்கியுள்ளார். அவர் தலையில் காயங்களுடன் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டுவரப்பட்ட போது கோமா நிலையில் இருந்தார். விபத்து காரணமாக மூளை காயம் அடைந்து  மூளை சாவு ஏற்பட்டு ஆறு மணி நேர இடைவெளியில் அவர் இறந்தது டாக்டர்கள் குழுவால் உறுதி செய்யப்பட்டது. 

 ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் ராஜகோபால், நியூரோ அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் கே செந்தில் குமார், தீவிர சிகிச்சை மருத்துவர், டாக்டர் கே அசோகன், நரம்பியல் நிபுணர், டாக்டர் பிரபா உதயகுமார், மயக்க மருந்து நிபுணர், ஆகியோர் கொண்ட உறுப்புகள் தான ஒருங்கிணைப்பாளர்கள் குழு உருவாக்கப்பட்டது. பின்னர் மருத்துவ குழுவினர் திருமதி பவித்ராவின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் மற்றும்  இரண்டு கருவிழிகள் தானமாக பெற்று அகற்றினர்.  ஒரு சிறுநீரகம், கே.எம்.சி.எச்  மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ள ஒருவருக்கும் பொருத்தபட்டது. சங்கரா கண் மருத்துவமனைக்கு இரண்டு கருவிழிகள்  மற்றும் கல்லீரல் பிஸ்ஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...