24 வயது பெண்ணின் உடல் உறுப்பு தானம் 5 பேருக்கு மறுவாழ்வு

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த 24 வயது பெண்ணின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. கோயம்புத்தூர் நகரில் அம்மங்குளம் பகுதி சேர்ந்தவர் திருமதி பவித்ரா நந்தகுமார், 24 வயதான அவர். தனது கணவன் மற்றும் மூன்று மாத குழந்தையுடன் அக்டோபர் 2, 2016 அன்று காலை காந்திபுரம் அருகே பயணித்த போது சாலை விபத்தில் சிக்கியுள்ளார். அவர் தலையில் காயங்களுடன் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டுவரப்பட்ட போது கோமா நிலையில் இருந்தார். விபத்து காரணமாக மூளை காயம் அடைந்து  மூளை சாவு ஏற்பட்டு ஆறு மணி நேர இடைவெளியில் அவர் இறந்தது டாக்டர்கள் குழுவால் உறுதி செய்யப்பட்டது. 

 ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் ராஜகோபால், நியூரோ அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் கே செந்தில் குமார், தீவிர சிகிச்சை மருத்துவர், டாக்டர் கே அசோகன், நரம்பியல் நிபுணர், டாக்டர் பிரபா உதயகுமார், மயக்க மருந்து நிபுணர், ஆகியோர் கொண்ட உறுப்புகள் தான ஒருங்கிணைப்பாளர்கள் குழு உருவாக்கப்பட்டது. பின்னர் மருத்துவ குழுவினர் திருமதி பவித்ராவின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் மற்றும்  இரண்டு கருவிழிகள் தானமாக பெற்று அகற்றினர்.  ஒரு சிறுநீரகம், கே.எம்.சி.எச்  மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ள ஒருவருக்கும் பொருத்தபட்டது. சங்கரா கண் மருத்துவமனைக்கு இரண்டு கருவிழிகள்  மற்றும் கல்லீரல் பிஸ்ஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...