சீனாவில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான சோதனை முயற்சி தொடக்கம்

பீஜிங்: இந்திய தொலைத்தொடர்புத்துறை 4ஜி எனப்படும் அதிவிரைவு சேவையை தற்போது வழங்கிவரும் நிலையில் வரும் 2020-ம் ஆண்டுக்குள் 5ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறைக்கான தொலைத்தொடர்பு சேவையை தங்கள் நாட்டு மக்களுக்கு வழங்க சீனா தீர்மானித்துள்ளது. அதற்கான முதற்கட்ட சோதனையில் சீனா இறங்கியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி சீனாவில் உள்ள சுமார் 130 கோடி மக்கள் கைபேசிகளை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 30 சதவீதம் பேர் 4ஜி சேவை இணைப்புகளை பெற்றுள்ளனர். வினாடிக்கு ஒரு ஜிபி வேகத்தில் செயலாற்றும் இந்த 4ஜி இணைப்பைவிட அதிகவேகம் கொண்டது இந்த 5ஜி சேவை இது வினாடிக்கு 20 ஜபி வரை அதிவேகமாக இயங்கக்கூடியதுமான 5ஜி இணைப்பை தங்கள் நாட்டு மக்களுக்கு விரைவாக அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.

கைபேசி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான தகவலைப்பெற விரும்பும்போது தற்போது 4ஜி இணைப்பின் மூலமாக பெற 10 மில்லிவினாடி நேரம் தேவைப்படுகிறது. ஆனால் இதே தகவலை 5ஜி இணைப்பின் வழியாக ஒரே மில்லிவினாடியில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் உள்ள 100 முக்கிய பெருநகரங்களில் இந்த 5ஜி சேவையை தொடங்குவதற்கான சிக்னல் கோபுரங்கள் மற்றும் தொலைத்தொடர்பு பரிமாற்ற கட்டுப்பாட்டு மையங்களை அமைக்கும் சோதனைரீதியான முதல்கட்ட முயற்சியில் சீனா தற்போது களமிறங்கி உள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Newsletter

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...