5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தையை 15 நாட்கள் மத்திய சிறையில் அடைக்க மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.


கோவையில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட வளர்ப்பு தந்தையை 15 நாட்கள் மத்திய சிறையில் அடைக்க மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னையை சேர்ந்த உஷா என்பவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு இவாஞ்சலின்  என்கிற ஐந்து வயது  மகள் உள்ளது.  இந்நிலையில் உஷா, சென்னையில் மகேந்திரன் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் குழந்தையோடு கோவை காட்டூர் ராம்நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் உஷா வேலை நிமித்தமாக குழந்தையை மகேந்திரனிடம் ஒப்படைத்து விட்டு ஊருக்குசென்றுள்ளார். 

இந்நிலையில் கடந்த திங்களன்று இரவு மயக்கநிலையில் இவாஞ்சலினை உடல்நிலைசரியில்லை என்று கோவை அரசு மருத்துவமனைக்கு மகேந்திரன் கொண்டு வந்துள்ளனர். உடலில் காயங்களோடு இருந்த இவாஞ்சலின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த சிறிது நேரத்தில் இறந்துள்ளது.  

இதனைத்தொடர்ந்து இறந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து காந்திபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துவிசாரனைமேற்கொள்கையில் வளர்ப்பு தந்தை மகேந்திரன் தலைமறைவாகியிருந்தது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து சென்னைக்கு தப்பிக்க முயன்ற மகேந்திரனை காட்டூர் போலீசார் கைது செய்தனர்.  இதை தொடர்ந்து மகேந்திரன் மீது பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி 15 நாட்கள் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.  ஐந்து வயது சிறுமியை வளர்ப்பு தந்தையே பாலியல் பலாத்கார கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுகொலை செய்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...