தேசிய அளவில் வெண்கலப் பதக்கம் வென்ற கோவை மாணவன்

கோவை: பீளமேடு பகுதியில் உள்ள ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த தேசிய படை மாணவன் ஆஷிக் டெல்லியில் நடைபெற்ற .22 துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்தான். தேசிய படை மாணவர்களுக்காக 6வது தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனியில் சார்பாக, துப்பாக்கி சுடுதல் பயிற்சி போட்டி நடைபெற்றது.

இதில் கோவையில் 5 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பின் சேலம் ஏற்காட்டில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியில் தேசிய படை மாணவன் ஆஷிக் தேர்வு பெற்றான். பின்னர், கந்தசாமி கவுடர் கல்லூரியில் நடைபெற்ற தேர்வு முகாமில் .22 துப்பாக்கி சுடுதல் பிரிவில் குரூப்பிங் தேர்வில் முதலிடம்  பிடித்தார்.



தொடர்ச்சியாக, சேலம், நாகர்கோயில், தூத்துக்குடி, மற்றும் பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக தேர்ச்சி பெற்று மதுரையில் நடைபெற்ற  கலந்து கொண்டு தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் சார்பாக தேசியபடை மாணவர்களுக்கு அணித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பின்பு, டெல்லியில் நடைபெற்ற இந்திய அளவிலான .22 துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்தார். இம்மாணவனை பள்ளியின் தாளாளர்  ஜி.கே விஜயகுமார், பள்ளி நிர்வாக அலுவலர் பிரேமா, பள்ளி தலைமையாசிரியர் மனோரமா மற்றும் தேசிய மாணவர்படை ஆசிரியர் குமரன் ஆகியோர் பாராட்டினார். 

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...