உயிரை காக்கும் புதிய முயற்சியில் போக்குவரத்து போலீசார்

தமிழகத்தில் சாலை விபத்துக்களால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இருந்த போதும் பலர் அதை கடைபிடிப்பதில்லை. வாகனத்  தணிக்கையின் போது ரூ.100-ஐ மட்டும் அபராதமாக கட்டிவிட்டு  ஹாயாக பறக்கின்றனர் இரு சக்கர வாகன ஓட்டிகள். 
இந்த நிலையில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க கோவை மாநகர போக்குவரத்து போலீசார் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து காவல் துறை இணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன்  கூறியதாவது :- 
சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை கணக்கீடு செய்ததில், ஹெல்மெட் அணியாதவர்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதை தடுக்க புதிய முயற்சியை மேற்கொண்டோம்.  முதலில், வருங்கால வாகன ஓட்டிகளான குழந்தைகளுக்கு  போக்குவரத்து விதி முறைகளை கற்றுத்தர முடிவு செய்தோம். அதன்படி, வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை கற்றுத் தருகிறோம். இது வரை 6 பள்ளிகளில் இந்த வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. 

போஸ்ட் கார்டு 
நாங்கள் எடுக்கும் வகுப்பில் மாணவர்களிடம் 'உங்கள் நண்பர் அல்லது பெற்றோரை ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியும் படி கூறுங்கள், அவ்வாறு உங்கள் பேச்சை கேட்டு அவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்தால் அதை எங்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்துங்கள்'  என்று கூறி, எங்கள் அலுவலக முகவரி அச்சிடப்பட்ட போஸ்ட் கார்டுகளை  பள்ளி மாணவர்களிடம் கொடுத்தோம்.  400 போஸ்ட் கார்டுகள் கொடுக்கப்பட்டதில் 150 கார்டுகளை மாணவர்கள் எங்களுக்கு கடிதமாக எழுதி அனுப்பியுள்ளனர். அதில் பெற்றோர் தங்களது பேச்சை கேட்பதாகவும் , தற்போது போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது. கடிதம் எழுதிய மாணவர்களுக்கு காவல் துறை சார்பில் ஒரு சிறிய பரிசு அளித்து வருகிறோம். 100 சதவிகித பாதுகாப்பான பயணமே எங்கள் நோக்கம். அதை விரைவில் சாத்தியப்படுத்துவோம். 
இவ்வாறு அவர் கூறினார்.  





Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...