ஓசையின் சார்பில் நடைபெற்ற 13வது காட்டுயிர் புகைப்படக் கண்காட்சி இன்று நிறைவு பெற்றது

தன்னார்வலர் அமைப்பான ஓசையின் சார்பில் கோவை கோட்ட தமிழ்நாடு அரசு வனத்துறை, மெட்ரோபாலிஸ் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து 13வது காட்டுயிர் புகைப்படக் கண்காட்சி கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அக்டொபர் 4ம் தேதி முதல் தொடங்கி 9ம் தேதி வரை நடைபெற்றது. 

இந்தக் கண்காட்சியில் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகு, அரியவகை பறவை மற்றும் விலங்கு இனங்கள், வண்ணத்து பட்டாம்பூச்சி உள்ளிட்டவற்றின் புகைப்படங்களும், மனித விலங்கு மோதல் குறித்தான படங்களும் இடம்பெற்றிருந்தன. உயிர் நிழல் 2016 என்ற இந்நிகழ்ச்சியின் தொடக்க நாள் முதல் அன்றாடம் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்து கண்டு ரசித்துச் சென்றனர். 

இந்தக் கண்காட்சியின் நிறைவு நாள் அக்டோபர் 9ம் தேதி (இன்று) கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கு. இராமசாமி தலைமையில் நடைபெற்ற இதில், வேளாண்மை பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.சக்திவேல் வரவேற்புரை வழங்கினார். சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஓசை அமைப்பின் அமைப்பாளர் ச. அகிலா நன்றியுரை வழங்கினார்.

முன்னதாக கண்காட்சி நாட்களில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, விடாடி வினா, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வெற்றிபெற்றோர்க்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...