20 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸப்பால் இணைந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள்



கோவை மாவட்டம் துடியலூரை அடுத்து உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 20 ஆண்டுகளுக்கு 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகள் மற்றும் அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் வாட்ஸ்சப் மூலம் இணைந்து சந்தித்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1995 முதல் 1997 வரையிலான காலத்தில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றினைய முடிவு செய்து ஒரு சில மாணவர்களின் உதவியும் மொபைல் அப்ளிகேசனான வாட்ஸப் மூலம் குரூப் உருவாக்கி ஒவ்வொருவராக இணைத்தனர். இரண்டு வாரங்களுக்குள்ளாகவே 90 சதவீதமான மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை இந்த குரூப்பில் இணைத்தனர். தொடர்ந்து அனைவரும் சந்திக்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதையும் தாங்கள் படித்த பள்ளியிலேயே படித்த அதே வகுப்பறையிலே நடத்துவது என்றும் முடிவு செய்தனர்.

அதன்படி அதே வகுப்பறையில் தாங்கள் அமர்ந்த அதே டேபிள்களில் அமர்ந்திருந்தனர். ஆசிரியர்கள் உள்ள வந்ததும் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தனர். தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சியைச் தொடங்கினர் அப்போதைய வகுப்பாசிரியர் மாணவ மாணவிகளின் வருகைப்பதிவேடுகளை வாசித்தார். அப்போது மாணவ மாணவிகள்  தங்கள் வருகைகளை பதிவு செய்தனர். அதையடுத்து 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எந்த நிலையில் உள்ளனர் என்று ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் கேக் வெட்டியும் ஆசிரியர் ஆசிரியர்களுக்கு பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி அவர்களை கெளரவித்தனர். தொடர்ந்து குழு புகைப்படம் எடுத்தும் மாணவ் மாணவிகள் தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

மேலும் மாணவ மாணவிகள் ஒன்றினைந்து தங்களால் ஆன தொகைகளை சேகரித்து பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கூறும்போது இது போன்று மற்ற பள்ளிகளிலும் மற்ற வகுப்புகளில் உள்ள முன்னாள் மாணவ மாணவிகள் இணைந்து இது போன்ற விழாக்களை நடத்த வேண்டும் எனவும் தங்களால் ஆன உதவிகளை தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

அதேபோல் நிகழ்ச்சியில் கல்ந்து கொண்ட மாணவ மாணவிகள் கூறும்போது 20 ஆண்டுகளாக எந்த வித தொடர்பும் இல்லாமல் இருந்து தற்போது வாட்சப் மூலம் இணைந்த்து தங்களால் மறக்க முடியாத நிகழ்வாக இருப்பதாகவும் மீண்டும் இது போன்ற நிகழ்வு எப்போது வரும் என காத்திருப்பதாகவும் தெரிவித்ததனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு வாட்சப் மூலம் இணைந்து அரசு பள்ளி மாணவ மாணவிகள் தாங்கள் படித்த அதே பள்ளியில் அதே வகுப்பறையில் அதே ஆசிரியர்களைக் கொண்டு விழா நடத்திய நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்தது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...