தீவிபத்தில் புதுப்பெண் உட்பட இரு பெண்கள் பலி

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி வசந்தா (22). இவர்களுக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி தனது வீட்டில் உள்ள மண்ணெண்னை அடுப்பை வசந்தா பற்ற வைக்க முயன்றார். எதிர்பாராதவிதமாக தீ அவர் மீது பரவியது. அவரின் கூச்சலை கேட்ட அக்கம்பக்கத்தினர் வசந்தாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வசந்தா இன்று காலை பலியானார். இது குறித்து வழக்கு பதிந்த போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

மற்றொரு சம்பவம்

கோவை கண்ணப்ப நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி சுகந்தி (37). சம்பவத்தன்று சுகந்தி தனது வீட்டில் இருந்த மண்ணெண்னை அடுப்பை பற்றவைக்கும் போது, அவர் மீது  தீ பரவியது. தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று மாலை உயிரிழந்தார். இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...