வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன் வாலாங்குளம் தூர்வார நடவடிக்கை

கோவையை சார்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு (ஈசிஜி) என்ற தன்னார்வ அமைப்புகள்  வாலாங்குளம் ஏரி மற்றும் பெரியகுளம் ஏரியை பராமரிக்கும் வகையில் தத்தெடுத்துள்ளனர். வாலாங்குளம் ஏரி தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக வாட்ஸ் ஆப் குழு நம்ம கோவை மூலமாக கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் விஜயகார்த்திகேயன் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த தகவல் மூலமாக  மாநகராட்சி அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இது தொடர்பாக  கோவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு நிறுவனர் முகமது சலீம் பேசுகையில்: திருச்சி சாலையில் அருகே உள்ள சிஎஸ்ஐ சர்ச் வாலாங்குளத்தில் குப்பைகொட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த தேவாலயத்தில் இது தொடர்பாக பல்வேறு முறை கூறப்பட்டுள்ளது. இதை பொருட்படுத்தமால் தேவாலயத்தில் உள்ள அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இந்த தேவாலயத்தில் நடைபெறும் ஒவ்வொரு விழாக்களிலும் மீதமாகும் எஞ்சிய உணவுகள், இலைகள், குப்பைகள் ஆகியவற்றை இந்த குளத்தில் கொட்டப்பட்டு வருகின்றது. இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேவாலயம் 73வது வார்டு பகுதிக்குட்பட்டது. இப்பகுதியில் மாநகராட்சி குப்பைக் கழிவுகளை வெளியேற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் இந்த தேவாலயத்தில் இருந்து குளத்திற்கு ஒரு வழி அமைத்து இங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாநகராட்சி வழிவகுக்க வேண்டும்.

இந்தமாதம் அக்டோபர் 20 அல்லது 22ம் தேதி வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. அதற்குள் இக்குளத்தை தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் என அவர் கூறினார்.

இந்த புதிய முயற்சியில், கோவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவிற்கு கையுறைகள் மற்றும் முகமூடிகள் போன்ற பொருட்கள் வழங்கிட பல்வேறு அமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்  உதவ முன்வந்துள்ளனர். 

இந்த வாலாங்குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் மற்றும் உதவும் கரங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு நிறுவனர் முகமது சலீம்-9787878910 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...