சாதியைப் பற்றி இழிவுபடுத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோவை: பொள்ளாச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவனை சகமாணவர்களின் மத்தியில் சாதியைப் பற்றி இழிவுபடுத்தி பாகுபாடு செய்து தாக்குதல் நடத்திய பள்ளியின் ஆசிரியர் ஓவிய மற்றும்  தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;

பொள்ளாச்சியில் உள்ள A.நாகூர் அரசு மத்திய மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் ஆனந்த் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர். பள்ளிக்கு சென்ற மாணவன் ஆனந்தை பள்ளி ஆசிரியர் ஓவிய, மற்றும் தலைமை ஆசிரியர் சகமானவர்கள் மத்தியில் அம்மாணவனை தாழ்த்தப்பட்ட சாதி என்று இழிவுபடுத்தியும் படிப்பதற்கு தகுதி இல்லையென்றும் கூறியும், மாணவனை தாக்கியுள்ளனர். தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியரை கேட்டபோது, படிக்க வைப்பதற்கு விருப்பம் இருந்தால் இங்கு படிக்க வையுங்கள் இல்லை என்றால் டி.சி வாங்கிக்கொண்டு செல்லுமாறும் கூறினர். பெற்றோரிடம் மறைமுகமாக சாதியை பற்றி பள்ளி தலைமை ஆசிரியர் பேசியது அவமானமாக இருந்ததாகவும், பின்னர் ஆனந்தை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு  அனுமதித்து. இது தொடர்பாக கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்து நாட்கள் ஆகியும் எவ்வித நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை. எனவே அவர்கள் மீது உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும், ஆனந்த் மற்றும் பெற்றோர்க்கு உடனடி நிவாரணம் வழங்கவும், மாணவன் அப்பள்ளியில் படிப்பை மேற்கொள்ள நிர்வாகம் தகுந்த ஏற்பாடு செய்யவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...