அர்ஜுன் சம்பத் பூஜை செய்த துப்பாக்கி யாருடையது தெரியுமா ?

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத், ஆயுத பூஜை தினத்தன்று இரு துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுக்கு பூஜை செய்து, அந்தப் புகைப்படத்தை சமுக வலைதளங்களில் பதிவேற்றினார். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அமைப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் உள்ளனர். 

இந்நிலையில், காவல் துறை ஆணையர் அமல்ராஜ் இதுகுறித்து கூறுகையில், அர்ஜுன்சம்பத் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ள அந்த துப்பாக்கி அவருடையது தானா? அப்படி அவருடையதென்றால் அதற்கு முறையான அனுமதி பெற்றுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தினோம். அர்ஜுன் சம்பத்  வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக ஆயுதப்படை காவலர் ஒருவர் அவரது வீட்டின் அருகே காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். ஆயுத பூஜை தினத்தன்று அந்த போலீஸ்காரரின் துப்பாகியை வாங்கித்தான் அர்ஜுன்சம்பத் பூஜை செய்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பாக வைக்க வேண்டிய துப்பாக்கியை, அடுத்தவரிடம் கொடுத்த அந்த காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...