வாடிக்கையாளருக்கு சேவை வழங்க ஏடிஎம்மில் வங்கி ஊழியர்கள் நியமிக்க ரிசர்வ் வங்கி யோசனை

மும்பை: ஏடிஎம் பயன்பாடு தொடர்பாக ரிசர்வ் வங்கி சர்வே எடுத்துள்ளது. இதில், ஆசியாவில் இந்தியர்கள்தான் மிக அதிக அளவில் ஏடிஎம் பயன்படுத்துகின்றனர் என தெரியவந்துள்ளது. மொபைல் பேங்கிங் பயன்படுத்துதிலும் இந்தியர்கள்தான் முதலிடம். சர்வே எடுத்ததில் பாதிப்பேர், வாரத்தி்ல் ஒரு முறையாவது ஏடிஎம் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். மலேசியாவில் இந்த பயன்பாடு 26 சதவீதமாகவும், சீனாவில் 44 சதவீதமாகவும் உள்ளது. 

இதுபோல் மொபைல் பேங்கிங் பயன்பாடு கடந்த மூன்று ஆண்டுகளில் 11 மடங்கு உயர்ந்துள்ளது. 2013ம் ஆண்டு ஆகஸ்டில் மொபைல் பேங்கிங் பரிவர்த்தனை எண்ணிக்கை 63 லட்சமாக இருந்தது, கடந்த ஆகஸ்டில் சுமார் 7 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியர்கள் ஏடிஎம் மட்டுமின்றி வங்கி கிளைக்கு செல்வதிலும் அதிக அளவில் உள்ளனர். எனவே இந்தியாவில் ஏடிஎம்க்கு எப்போதுமே தேவை உள்ளது. கடந்த ஜூலையில் 75 கோடி ஏடிஎம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதே மாதத்தில் 6.5 கோடி மொபைல் வங்கி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன. தற்போது ஏடிஎம் இயந்திரத்துக்கு ஒரு காவலாளி மட்டும் நியமிக்கப்படுகிறார். இத்துடன் கூடுதலாக ஒரு வங்கி ஊழியர் அல்லது வங்கி சேவைக்கான ஒரு நபர் தனியாக நியமிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. இதன்மூலம், வங்கி கிளையில் பெறக்கூடிய கூடுதல் சேவைகளை ஏடிஎம் மூலாமாகவே பெறவும், வங்கி வர்த்தகத்தை விரிவு படுத்தவும் இது உதவும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...