கள்ள நோட்டு மாற்ற முயன்றவருக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர் கைது

ஆலந்தூர்: கள்ள நோட்டு மாற்ற முயன்ற வடமாநில வாலிபருக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள் (55), தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை முக்தம்ஜி தெருவில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, வடமாநில வாலிபர் ஒருவர் அவரிடம் காய்கறி வாங்கிவிட்டு, ரூ.1000 நோட்டை கொடுத்துள்ளார். 

லட்சுமி அம்மாளிடம் சில்லரை இல்லாததால், அருகில் உள்ள கடைக்கு சென்று, அந்த ரூபாய் நோட்டை கொடுத்து சில்லரை கேட்டார். அதை பரிசோதித்த கடைக்காரர் அந்த நோட்டு கள்ளநோட்டு என்பதை உறுதி செய்தார். இதுபற்றி அந்த வாலிபரிடம் விசாரித்தபோது, அங்கிருந்து தப்பி ஓடினார்.

அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டு முருகதாஸ், அந்த வாலிபரை மடக்கி பிடித்து, பரங்கிமலை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரிடம் விசாரித்தனர். அதில், கொல்கத்தாவை சேர்ந்த தரிபுல்லா (35) என்பது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். 

இவர், ஆலந்தூர் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டு வரும் அப்துல் வகாப் (30) என்பவரோடு தங்கி இருப்பதாக கூறினார். இதையடுத்து, போலீசார் அங்கு சென்றபோது, அவர் தலைமறைவானது தெரிந்தது. இந்நிலையில், அதே பகுதியில் தலைமறைவாக இருந்த அப்துல் வகாப்பை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...