கள்ள நோட்டு மாற்ற முயன்றவருக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர் கைது

ஆலந்தூர்: கள்ள நோட்டு மாற்ற முயன்ற வடமாநில வாலிபருக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள் (55), தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை முக்தம்ஜி தெருவில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, வடமாநில வாலிபர் ஒருவர் அவரிடம் காய்கறி வாங்கிவிட்டு, ரூ.1000 நோட்டை கொடுத்துள்ளார். 

லட்சுமி அம்மாளிடம் சில்லரை இல்லாததால், அருகில் உள்ள கடைக்கு சென்று, அந்த ரூபாய் நோட்டை கொடுத்து சில்லரை கேட்டார். அதை பரிசோதித்த கடைக்காரர் அந்த நோட்டு கள்ளநோட்டு என்பதை உறுதி செய்தார். இதுபற்றி அந்த வாலிபரிடம் விசாரித்தபோது, அங்கிருந்து தப்பி ஓடினார்.

அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டு முருகதாஸ், அந்த வாலிபரை மடக்கி பிடித்து, பரங்கிமலை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரிடம் விசாரித்தனர். அதில், கொல்கத்தாவை சேர்ந்த தரிபுல்லா (35) என்பது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். 

இவர், ஆலந்தூர் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டு வரும் அப்துல் வகாப் (30) என்பவரோடு தங்கி இருப்பதாக கூறினார். இதையடுத்து, போலீசார் அங்கு சென்றபோது, அவர் தலைமறைவானது தெரிந்தது. இந்நிலையில், அதே பகுதியில் தலைமறைவாக இருந்த அப்துல் வகாப்பை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...