குஜராத்தில் ஐ.எஸ்.ஐ உளவாளிகள் இருவர் கைது : ராணுவ நடவடிக்கைகளை நோட்டமிட்டதாக விசாரணயில் தகவல்

காவ்தா: பாகிஸ்தானைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ உளவாளிகள் 2 பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்ச் மாவட்டத்தில் உள்ள காவ்தா நகரில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது முகமது அலானா மற்றும் சஃபூர் சுமாரா ஆகிய இரண்டு பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பாகி்ஸ்தான் நாட்டின் சிம் கார்டுடன் கூடிய செல்போன்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளை அவர்கள் கண்காணித்து வந்தது தெரிய வந்துள்ளது.

ராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து பாகிஸ்தானில் உள்ள தமது ஆதரவாளர்களுக்கு தெரிவித்ததாக அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதற்கான முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பயங்கரவாதிகள், அதற்காக சுமார் 250 பேரை ஊடுருவவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், I.S.I உளவாளிகள் இரண்டு பேர் குஜராத்தில் பிடிப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...