இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்

அருந்ததியினருக்காக வழங்கப்பட வேண்டிய இலவச வீட்டு மனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 



கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் பகுதியில் 60,000க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடில்லாத ஏழை அருந்ததிய மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கபப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும், சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை வேறு சிலருக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

எனவே, விவசாய மற்றும் வீடு கட்டுவதற்கு தேவையான நிலத்தை வழங்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.



இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் வெண்மணி கூறியதாவது: நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் 1000 ஏக்கர் நிலத்தை தொண்டாமுத்தூர் பகுதியில் அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளது. அதில், தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் அருந்ததியர் மக்களுக்கு பட்டா பிரித்து கொடுக்க வேண்டும். இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்குமேலும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் தவறினால் மேற்குறிப்பிட்ட இடத்தை கையகப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...