இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்

அருந்ததியினருக்காக வழங்கப்பட வேண்டிய இலவச வீட்டு மனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 



கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் பகுதியில் 60,000க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடில்லாத ஏழை அருந்ததிய மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கபப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும், சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை வேறு சிலருக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

எனவே, விவசாய மற்றும் வீடு கட்டுவதற்கு தேவையான நிலத்தை வழங்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.



இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் வெண்மணி கூறியதாவது: நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் 1000 ஏக்கர் நிலத்தை தொண்டாமுத்தூர் பகுதியில் அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளது. அதில், தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் அருந்ததியர் மக்களுக்கு பட்டா பிரித்து கொடுக்க வேண்டும். இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்குமேலும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் தவறினால் மேற்குறிப்பிட்ட இடத்தை கையகப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

Newsletter

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...

கரூர் தேர்தல் களத்தில் பரபரப்பு: செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு..!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 7 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று கா...

“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின...

கோவை வடக்கில் வானதிக்கு ஆதரவாக BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தீவிர பரப்புரை

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஓணாம்பாளையத்தில் இன்று பரப்பு...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் தீவிர பிரசாரம்

கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பி...

கோவை தெற்கு தொகுதி: ராமநாதபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் ராமநாதபுரம் வார்டு 66 உட்பட பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று...