அப்துல் கலாம் 85-ஆவது பிறந்த நாளையொட்டி, ரூ.15 கோடியில் மணி மண்டபம்

ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 85-ஆவது பிறந்த நாளையொட்டி, இராமேஸ்வரத்தில் உள்ள அவரது சமாதி வளாகத்தில் ரூ.15 கோடியில் மணி மண்டபம் கட்டுவதற்கான பணிகள் சனிக்கிழமை நாளை தொடங்க உள்ளது.

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் சமாதி வளாகத்தில் அவரது வாழ்க்கை வரலாறு கண்காட்சி, அறிவுசார் மையம், நினைவு மண்டபம் ஆகியவற்றை அமைக்க இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்காக கடந்த ஜூலை 27-ஆம் தேதி நடைபெற்ற முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் திட்டப்பணிகள் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதையடுத்து அப்துல்கலாமின் 85-ஆவது பிறந்த நாளையொட்டி, முதல்கட்டமாக 27 ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்பில் ரூ.15 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டுவதற்கான பணி சனிக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கப்படவுள்ளது.

இதையொட்டி, இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கட்டடப் பிரிவு பொறியாளர் சீனிவாசலு தலைமையில் சமாதி வளாகப் பகுதியில் ஆய்வு நடைபெற்றது. மணிமண்டபம் கட்டப்படும் பகுதியில் வரைபடத்தின்படி அளவீடு செய்து குறியீடு கம்பிகள் ஊன்றும் பணிகளில் பொறியாளர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து திட்டப்பணி ஒப்பந்தகாரர் ஜெகநாதன் தெரிவித்ததாவது: 

அப்துல் கலாம் மணிமண்டபம் அமைக்கும் பணிகள் பூமி பூஜையுடன் சனிக்கிழமை தொடங்கப்படவுள்ளன. இந்தப் பணிகளை 2017-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தன்று புதிய மணி மண்டபத்தை திறந்து, அதில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இரண்டாம் கட்டப்பணியாக ரூ. 35 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் மற்றும் கண்காட்சி மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...