நாளை துவங்குகிறது பிரிக்ஸ் மாநாடு: பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம்

பனாஜி: பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு கோவாவில் நாளை துவங்க உள்ள நிலையில், பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியை இந்தியா மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்ரிக்கா, இந்தியா ஆகிய உறுப்பு நாடுகளை கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு, நாளையும் நாளை மறுநாளும் கோவாவில் நடைபெற உள்ளது.  இதில் 4 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். உரி தாக்குதலை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் நடக்க இருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இதனை தொடர்ந்து வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளும் சார்க் மாநாட்டை புறகணித்ததால் மாநாடு தள்ளிவைக்கப்பட்டது.

சர்வதேச நாடுகளின் மத்தியில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் நடவடிக்கையின் ஒருகட்டத்தை இந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் மூலம் இந்தியா பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பாரக்கப்படுகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட உள்ளது. மேலும் கூடங்குளம் 3 மற்றம் 4-வது அணுஉலை திட்டமும் துவங்கப்பட உள்ளது.

மேலும் இருநாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. இதை தவிர சீனா உள்ளிட்ட நாடுகளுடன் நல்லுறவை வலுப்படுத்தவும் இந்த மாநாட்டை இந்தியா பயன்படுத்திக் கொள்ளும் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன,

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...