ராணுவம் பேசாது; வீரத்தை காட்டும்: பிரதமர் மோடி புகழாரம்

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் போர் நினைவிடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, ‘ராணுவம் பேசாது; வீரத்தை செயலில் காட்டும்’ என்று புகழ்ந்து பேசியதுடன், ‘தேசம், எல்லைகளை கடந்த பல மனித உயிர்களை காப்பாற்றியவர்கள் நமது ராணுவ வீரர்கள்’ என பாராட்டினார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில், போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கான நினைவிடம் 41 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இதில் முன்னாள் ராணுவத்தினர் பலர் கலந்து கொண்டனர். சமீபத்தில், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரம் கேட்டு எதிர்க்கட்சிகள் சந்தேகத்தை கிளப்பின. அதற்கு பதிலடி தரும் வகையில் பிரதமர் மோடி, தனது பேச்சை தொடங்கினார். அவர், பேசியதாவது: நமது ராணுவம் எப்போதும் பேசுவதில்லை. தனது வீரத்தை செயலில் தான் காட்டுகிறது. அதைத்தான் நமது பாதுகாப்பு அமைச்சரும் செய்கிறார். நாம், ராணுவ வீரர்களைப் பற்றி பேசும் போது, அவர்களின் சீருடை, வீரத்தை பற்றிதான் பெரும்பாலும் குறிப்பிடுகிறோம். அதையும் தாண்டி, மனிதநேயத்தின் உதாரணமாக அவர்களை நாம் பார்க்க வேண்டும்.

ஐநா அமைதிப்படையில் மிகப்பெரும் பங்களிப்பை அளித்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நமது ராணுவம், எல்லை, தேசத்தை தாண்டி பல மனித உயிர்களை காப்பாற்றி உள்ளது. ஏமன் உள்நாட்டு போரில், பொதுமக்களை மீட்பதில் ராணுவம் முக்கிய பங்காற்றியது. அப்போது இந்தியர்களை மட்டுமின்றி சில பாகிஸ்தான் மக்களைக் கூட நமது ராணுவம் காப்பாற்றி வந்துள்ளது. காஷ்மீர், உத்தரகாண்ட் வெள்ளத்தின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ராணுவம் ஈடுபட்டு பல உயிர்களை காப்பாற்றியது. காஷ்மீரில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த நமது ராணுவத்தினர், அங்குள்ள சில மக்கள் நம் மீது கல்வீசியவர்களாயிற்றே என ஒருபோதும் நினைக்காமல் பலரை காப்பாற்றி உள்ளனர். இப்படி, எல்லையை காப்பது மட்டுமின்றி பேரிடர் சமயத்திலும் அவர்கள் நம் உயிரை காப்பாற்றியுள்ளனர் ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி, ஒரே பென்ஷன் திட்டத்தில், முந்தைய அரசுகள் பொய்யான பல வாக்குறுதிகளை அளித்தன. ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. ராணுவ வீரர்களின் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக இந்த அரசு பெருமை கொள்கிறது.

எல்லையில் உயிரை பணயம் வைத்து, இரவு பகலாக அவர்கள் பாதுகாப்பதால் தான் நம்மால் இங்கு இரவில் நிம்மதியாக உறங்க முடிகிறது. சில நாடுகளில் ராணுவ வீரர்களை விமான நிலையத்திலோ, ரயில் நிலையத்திலோ பார்க்கும் போது, மக்கள் எழுந்து நின்று, கைதட்டி அவர்களுக்கு மரியாதை செய்கின்றனர். அதை நாமும் கடைபிடிப்போம்.இவ்வாறு மோடி பேசினார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...