என்எஸ்ஜி குரூப், மசூத் அசார் விவகாரம் சீனாவின் நிலையில் மாற்றம் இல்லை: வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு

என்எஸ்ஜி குழுவில் இந்தியா சேர எதிர்ப்பு தெரிவித்ததற்கும், மசூத் அசாரை ஐநாவால் தடை செய்யப்பட்ட தீவிரவாதி என அறிவிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்த சீனாவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று இந்தியா வர உள்ளார். இந்த சூழ்நிலையில் அணுசப்ளை செய்யும் குழுவில் இந்தியா சேர எதிர்ப்பு தெரிவித்தது, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்க தலைவர் மசூத் அசாரை ஐநாவால் அங்கீரிக்கப்பட்ட தீவிரவாதி என்ற அறிவிப்பை வெளியிட முயற்சி செய்த இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது போன்ற சீனாவின் நிலையில் மாற்றம் உண்டா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜெங் ஜங் பதில் அளித்து கூறியதாவது:இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவு மிகவும் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

அதேசமயம் அணுசப்ளை செய்யும் குழுவில் இந்தியாவை சேர்ப்பது, மசூத் அசாருக்கு தடை விதிப்பது போன்ற விவகாரங்களில் சீனாவின் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நான் சீனாவின் நிலையைப்பற்றித்தான் எடுத்துக்கூறமுடியும். இருப்பினும் எதிர்காலத்தில் இருநாட்டு பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா-பாகிஸ்தான் இடையிலே பொருளாதார மண்டலம் அமைப்பது குறித்து இருநாடுகள் இடையேயும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...