அமெரிக்காவில் தலை ஒட்டி பிறந்த குழந்தைகள் தனித்தனியாக பிரிப்பு

அமெரிக்காவில் நியூயார்க்கை சேர்ந்த தம்பதி கிறிஸ்டியன் மேக்டொனால்டு- நிகோல், இவர்களுக்கு கடந்த ஆண்டு (2015) செப்டம்பர் 9-ந்தேதி தலை ஒட்டிய நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

இவர்களுக்கு ஜடோன், அணியாஸ் என பெயரிட்டனர். தலை ஒட்டி பிறந்த இரட்டையர்களை தனித்தனியாக பிரிக்க நியூயார்க்கை சேர்ந்த மண்டை ஓடு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச்சை மேக்டொனால்டு நிகோல் தம்பதி அணுகினர்.

பிறந்து ஓராண்டுக்கு பிறகு அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். அவரது அறிவுரையின் பேரில் பிறந்து 13 மாதத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அதை தொடர்ந்து டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச் தலைமையிலான மருத்துவ குழுவினர் 16½ மணி நேரம் ஆபரேசன் செய்து தலை ஒட்டி பிறந்த இரட்டையர்களை வெற்றிகரமாக தனித்தனியாக பிரித்து எடுத்தனர்.

அவர்களில் ஜடோன் முதன் முதலில் பிரித்தெடுக்கப்பட்டான். அவனது மண்டை ஓடு சீரமைக்கப்பட்டு சக்கர படுக்கையில் வைத்து வெளியே கொண்டு வரப்பட்டான். அதன் பின்னர் அனியாசும் எடுத்து வரப்பட்டான்.

தலை ஒட்டிய நிலையில் இருந்த மகன்கள் தனித்தனியாக வந்ததை பார்த்த அவர்களது பெற்றோர் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதனர். இது குறித்து கூறிய அவர்கள் இதை சொல்ல தங்களுக்கு வார்த்தைகளே இல்லை என தெரிவித்து டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச்சுக்கு நன்றியை காணிக்கையாக்கினர்.

இது டாக்டர் குட்ரிச்சின் தலை ஒட்டி பிறந்த குழந்தைகளை பிரித்து எடுத்த 7-வது ஆபரேசன் ஆகும். மேலும் சர்வதேச அளவில் தலை ஒட்டி பிறந்தவர்களை பிரித்தெடுத்த 59-வது ஆபரேசனாக கருதப்படுகிறது. இத்தகைய அறுவை சிகிச்சை கடந்த 1952-ம் ஆண்டு முதல் செய்யப்படுகிறது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...