சர்வதேச உணவு நாளில் அதன் மதிப்பை நாம் உணர வேண்டும்


உணவு, உடை, உறைவிடமே ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையாகும். உலக மக்கள் அனைவரும் அதற்காகவே வாழ்ந்துவருகின்றனர். மனிதன் உடையின்றியும், தங்க இடமின்றியும் கூட வாழ்ந்துவிடலாம். ஆனால், உணவின்றி வாழ்வு என்பது சாத்தியமற்றது.

இதுகுறித்து, உணவு சம்பந்தமான தொழிலில் ஈடுபட்டுள்ளோர் சிலர் நம்மிடம் கருத்தை பகிர்ந்துள்ளனர்.

ரெசிடென்சி டவர்சின் பொதுமேலாளர் எரின் லூயிஸ் கூறுகையில்:-

"எங்கள் உணவகத்தின் உணவுக்கு முழு பொறுப்பு நாங்கள் ஏற்கிறோம். இவ்வுலகில் பல மில்லியன் மக்கள் உணவின்றி உள்ளனர். பட்டினியால் ஊட்டச்சத்து இன்றி இறப்போரின் எண்ணக்கை மிக அதிகம். உணவு கிடைக்கப்பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். உங்களால் எந்தளவிற்கு சாப்பிட முடியுமோ அந்தளவிற்கு உணவு பெற்றுக்கொள்ளுங்கள். எந்தளவிற்கு உணவு பெறுகிறீர்களோ அதை முழுவதும் உண்டுவிடுங்கள். இதுதான் தங்கள் உணவகத்திற்கு வரும் விருந்தினருக்கு நாங்கள் தெரியப்படுத்துவது. எங்கு, எப்படி இருந்தாலும் எணவினை வீனாக்காதீர்கள்'' என்றார்.

விஜய் எலன்ஷா நிர்வாக இயக்குநர் சிவ் குமார் கூறியதாவது:-

''உணவு என்பது உணர்வுடன் தொடர்புடையது. நாம் அனைவரும் உணவிற்கு மரியாதை செலுத்த வேண்டும். நமக்கு மூன்று வேளையும் உணவு கிடைக்கிறது என்றார் அது நாம் பெற்ற ஆசீர்வாதமே. நாங்கள் எங்கள் உணவகத்தில் உணவை வீணடிக்க அனுமதிப்பதில்லை. நுகர்வோரின் தேவைக்கேற்பவே உணவினை பரிமாறுகிறோம். மேலும், மீதமாகும் உணவுகள் தேவைப்படுவோருக்கு அளிக்கப்படுகிறது'' என்றார்.

தட்'ஸ் ஒய் குரூப் ரஞ்சனா கூறியதாவது:- 

''இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகளைக்கொண்டே உணவி தயாரிக்கப்படுகிறது. மேலும்,இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட எண்ணையையே சமைக்க பயன்படுதிதுகிறோம். இந்த சமூகத்தில் எத்தனையோ பேர் உணவின்றி உள்ளனர். அவர்களுக்காக நாங்கள் சில தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் உணவளித்து வகிறோம்'' என்றார்.

நீரஜ் அகர்வால் இனிப்புக் கடை நிறுவனரான நீரஜ் அகர்வால் கூறியதாவது:- 

"உணவானது ஆரோக்கியமானதாகவும், சுகாதாரமாணதாகவும் இருக்க வேண்டும். எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு துரித உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இந்த கொள்கையே எங்களது கடையிலும் பின்பற்றப்படுகிறது. நாங்கள், பீசா, பர்கர் போன்ற உணவு வகைகளை செய்வதில்லை. மக்கள் சுகாதாரமான உணவையே விருப்புகின்றனர். அதற்கேற்பவே இங்கு உணவு தயாரிக்கப்படுகிறது. சில உணவகங்களில் உணவு செய்யும் முறைகள் சுகாதாரமாக இருப்பதில்லை. அதனாலேயே பெரும்பாலான மக்கள் உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். ஆனால், எங்கள் உணவகத்தைப் பொருத்தவரை அனைத்து தொழிலாளர்களும் சுத்தத்தை கடைபிடித்து வருகின்றனர். எங்கு உணவு தயாரிக்கப்படுகிறது என்பது முக்கியமில்லை. எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதே முக்கியம்'' என்றார். 

சாக்லேட் கனேச் நிறுனத்தின் அருண் விஸ்வநாதன் கூறியதாவது:-

"அதிகப்படியான இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். அதுவே நம் நாட்டிற்கு தற்சமயம் தேவையாக உள்ளது. நாம் நம் முன்னோர்களில் பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபட வேண்டும். விவசாயிகளுக்கான நல்ல வாய்புகளை உருவாக்க வேண்டும். விவசாயம் இன்றி உணவு இல்லை, இவ்வுலல் எதுவும் இல்லை என்பதை எதிர்கால தலைமுறையினருக்கு உணர்த்தவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இளைஞர்கள் விவசாயத்திற்கான தேவையை புரிந்து அதில் ஈடுபடுவாகள் என நன் நம்புகிறேன்" என்றார்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...