அனைத்து தீவிரவாத குழுக்களையும் பாகிஸ்தான் தடை செய்ய வேண்டும்

வாஷிங்டன்: பாகிஸ்தானில் செயல்படும் அனைத்து தீவிரவாத குழுக்களையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கண்டிப்புடன் கூறியுள்ளது. காஷ்மீர் வன்முறை குறித்து உலக நாடுகள் மத்தியில் பேச சென்ற பாகிஸ்தான் அரசின் பிரதிநிதிகளுக்கு, செப்டம்பர் 18ல் உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.  நியூயார்க்கில் நடந்த ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டை உலக நாடுகள் ஏற்க மறுத்து விட்டன. குறிப்பாக அமெரிக்கா இந்த விஷயத்தில் பாகிஸ்தான் மீது கடும் கண்டனத்தை தெரிவித்தது.

பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் தீவிரவாத குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியது. தற்போது மீண்டும் அதே கருத்தை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனடர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீவிரவாதிகள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். பாகிஸ்தான் மண்ணில் இயங்கி வரும் தீவிரவாத குழுக்களை அங்கீகரிக்காமல் தடை செய்ய வேண்டும். அதன் பின் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதை நிறுத்த வேண்டும். தீவிரவாத தாக்குதலால், பிரிவினைவாதிகளின் வன்முறையால் பாகிஸ்தானும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

அப்படிப்பட்ட தீவிரவாத குழுக்களிடம் இருந்து பாகிஸ்தானை காப்பாற்ற அமெரிக்கா உதவ தயாராக உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக தீவிரவாதிகள் என்று கண்டறியப்பட்ட குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தான் மண்ணை தீவிரவாதிகள் பாதுகாப்பான இடமாக கருத இடம் கொடுக்கக்கூடாது. இந்தியா, பாகிஸ்தான் இடையே இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பேச்சுவார்த்தை மூலம்தான் தற்போது எழுந்துள்ள பதற்றத்தை தணிக்க முடியும். தங்கள் மத்தியில் உள்ள பிரச்னைகளை சமரச முயற்சி மூலம் தான் தீர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...